The Reviewed Link for Amma Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
ஒரு தாய் ஐந்து குழந்தைகளையும் வளர்த்து
விடுவாள்...!
ஆனால் ஐந்து குழந்தைகளும்
சேர்ந்து ஒரு தாயை காப்பாற்றுவது கடினம்...!!!
எல்லாமாய் இருக்கும் அம்மாவிற்கு எப்போதும் நேரமில்லை அவளாக இருக்க மட்டும்..
சுவாசம் அளித்து குருதி பெருக்கி உள்ளம் அறிந்து உண்மை சொல்லி தன்மானம் போற்ற தரணியில் தவழவிட்டாள் என் தாய்!!
என்ன தான் பஞ்சு மெத்தையில் உறங்கினாலும் தாய் மடியில் உறங்கும் போது உணரும் பாதுகாப்பிற்கு எதுவும் ஈடாகாதே...!!
அடி முடி தேடினாலும் அகராதியை புரட்டினாலும்
முழுமையான அர்த்தம் அறிய முடியாத உயிர்ச் சித்திரம்
- அம்மா
கேட்டதை வாங்கி கொடுத்துவிட்டால் மனைவிக்கு மகிழ்ச்சி...
என்ன வேண்டும் என்று கேட்டாலே தாய்க்கு மகிழ்ச்சி...!
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்... என் அம்மா காலில் மிதிபட அல்ல.... என்னை சுமந்து அவளை ஒரு முறை
நான் சுமப்பதற்காக...
மூன்றெழுத்துக் கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று...!
நான் பார்த்த முதல் முகம்! நான் பேசிய முதல் வார்த்தை ! நான் மறக்கவே முடியாத முதல்! ஓவியம் என் அம்மா..!
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
தாயின் கருவறை...
எத்தனை முறை சண்டை போட்டாலும்...
தேடிவந்து பேசும் தெய்வம் என் தாயை தவிர வேறேதும் உண்டோ ...
இந்த உலகினிலே...
ஆயிரம் முறை காயப்பட்டாலும்,
தன்னை ஒரு முறைக் கூட காயப்படுத்தாத உறவு அம்மா!!
என் முகம் பார்க்கும் முன்பே! என் குரல் கேட்கும் முன்பே! என் குணம் அறியும் முன்பே ! என்னை நேசித்த ஓர் இதயம்! ஏன் அம்மா மட்டுமே
என் அம்மா என்னை அடிக்கும் போது இருந்த கோபத்தை விட
நான் அழுத பின் என்னை அணைக்கும் பொழுது இருந்த பாசம் தான் பெரிது.
அம்மாவின் கைக்குள் இருந்த வரை உலகம் அழகாகத்தான் தெரிந்தது...!
ஒவ்வொரு நாளும் கவலை படுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை பட மாட்டாள் அம்மா .....
அன்பு, அக்கறை அரவணைப்பு, பாசம், நேசம், தியாகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே இடத்தில் பெற முடிந்தால் அதுதான் உண்மையான வாழும் கடவுள்
அம்மா
அடி வயிற்றில் அறை தந்து அதிலிருந்து அவதரிக்க அவகாசமும் அன்பும் தந்து அழகு மிகு அவனியில் அம்மாவென்றழைக்க அருள் தந்த அன்னையே நீ அம்மன் தாயோ...?
முடியாத பாசம் உனக்காக அழுகும் விழிகள் நீ மட்டும் சாய்ந்து கொள்ள ஒரு தோள் உன்னை பசிக்காமல் பார்த்து கொள்ளும் ஒரே ஒரு தேவதை
"அம்மா "
என் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக!! உன் தேவைகளை குறைத்துக் கொண்டவள்!! "நீதானே அம்மா"
"உன்னை விட்டு எத்தனை உறவுகள் மதிக்காமல் சென்றாலும்..! உன் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உன் கண்ணீரை துடிப்பவள் தான் "அம்மா
பூமி தாங்கும் முன்னே, நம்மை பூவாய் தாங்கியவள் நம் அன்னை..
Thanks for spending time reading the Amma Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.