The Reviewed Link for the Beautiful Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
அதிகமாக பேச நினைப்பதும், அதிகமாக பார்க்க நினைப்பதும், நாம் உண்மையாக நேசிப்பவர்களை மட்டுமே.!
கவலை இல்லாத மனிதர் இருவர், ஒருவர் கருவறையில் மற்றொருவர் கல்லறையில்
பூக்களைப் பார்த்து புன்னகைக்க கற்றுக் கொள்ளுங்கள் ஒரு நாளில் வாடிவிடும் என்று தெரிந்தும் அழகாக பூத்து மணம் பரப்புகின்றதே
நீ விழும்போது முதலில் உதவி செய்பவன், ஏற்கனவே அந்த வலியை உணர்ந்தவனாக இருப்பான்...!
கோபத்தில் உன் அன்பையும் மௌனத்தில் உன் வார்த்தைகளையும் எவர் புரிந்து கொள்கிறார்களோ அவர்களே உனக்காக படைக்கப்பட்ட உண்மையான உறவுகள்...!!
பூத்திருக்கும் மலர்களை கூட பறிக்க மனமில்லை காரணம் பிரிவின் வலி எனக்கும் தெரியும்
ரசிப்பதற்கு ஏதேனுமொரு விஷயம் தினமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகானது
இருப்பதை கொண்டு சந்தோஷமடையாதவரை சந்தோஷமே நெருங்குவதில்லை .....
இறக்கும் போது நமக்கு வேண்டாதவரையும் பார்க்க விரும்புகிறோம்.... இருக்கும் போது நமக்கு வேண்டியவரையும் பார்க்க மறுக்கிறோம்...
நேற்று செய்யவேண்டியதை இன்று செய்தால் சோம்பேறி
இன்று செய்ய வேண்டியதை இன்றே செய்தால் சுறுசுறுப்பானவர்
நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்தால்.... வெற்றியாவார்..
வாழ்க்கை என்பது ஒரு முறை தான். அதனால் உடன் இருக்கும் உறவுகளிடம் கொஞ்சமாவது பாசமாகவும் அன்புடனும் நடந்து கொள்வோம். அவர்கள் இல்லாத பொழுது வருந்துவதில் பயனில்லை . வாழ்க்கை பயணம் என்பது மிகவும் அழகான பூக்கள் நிரம்பிய பாதை, அதை முட்களால் சேதப்படுத்த வேண்டாம்....!
விழிகளுக்குள் கருநிலவை சுமந்தே ஈர்க்கிறாள் பார்ப்பவரை மயக்கம் கொண்டு கண்சிமிட்ட செய்ய.
பாதைகள் தொடர்ந்தால் நம் பயணங்கள் முடியாது, விழுந்தவன் துணிவுடன் எழுந்தால் இனி வெற்றி மட்டும் தான் வரலாறு
கலைந்து போகும் என்று தெரிந்தே கனவு காண்கிறேன் உன்னை காதலிப்பதை போல்.
வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும், நேரமும், சொற்களும்.
மற்றவர்களின் தவறுகள் நமக்கு நல்ல ஆசிரியர்கள்.
உண்மையான அன்பினைத் தேடுகிறேன் ஒவ்வொரு மணித்துளியும் முடிவில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
வாழ்வதற்கு நாம் எப்போதும். தயாராகிக் கொண்டிருக்கிறோமே தவிர, ஒருபோதும் நாம் வாழ்வதில்லை
அழகிற்காக உண்டாகும் காதல் பூ விரைவில் வாடி விடுகிறது
தாயின் அன்பை வெளியிட உலகத்தில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை
என் நட்புடன் காதல் கொண்டுள்ளேனா? அல்லது என் மனதுக்கு பிடித்த காதவிடம் நட்பு கொண்டுள்ளேனா? விடை இரண்டும் என்றாலும் இரண்டில் ஒன்றென்றாலும் எனக்கு உன்னை பிடிக்கும் என்பது மட்டும் நிஜம்!
உயிர் எழுத்தில் "அ" எடுத்து மெய் எழுத்தில் ம்" எடுத்து உயிர்மெய் எழுத்தில் “மா” எடுத்து அழகு தமிழில் கோர்த்தெடுத்த முத்து அம்மா
அவளின் புதையல் நிரம்பிய விழிகளுக்காக இமைகள் நடத்தும் முற்றுகைப் போர்... கண் சிமிட்டல்...!
நண்பர்களாக பழகி காதலர்களானோம். ஒரு காதல் விபத்தில் காதல் மறந்து ... நண்பர்களாய் நடிக்கின்றோம்......
வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம் பொறுமை.
நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
ஒரு பெண்ணின் அன்பு கிடைக்கும் வரைதான் அதற்காக ஆண் போராடுகிறான்.. பின் அதை தக்கவைத்துக்கொள்ள பெண் போராட துவங்கிவிடுவாள்..!!
உன் அழகினால் நான் எழுதும் எழுத்துக்கள் யாவும் கவிதைகள்...
திறந்த புத்தகமாக சிலருடைய வாழ்க்கை இருந்தாலும், அதிலும் மெளனமாக வாசிக்க வேண்டிய பக்கங்கள் உண்டு..!!
கவர்ச்சியில் வரும் காதல் எல்லாம் காலப்போக்கில் ஓடிவிடும் முழுமை பெற்ற காதல் தான் முதுமை வரை கூட வரும்
தோல்வியை நேசியுங்கள் வெற்றி உங்களை நேசிக்கும்...
ஆணின் கர்வம்... ஒரு பெண்ணின் மனதில்.... இடம் பிடிக்கும் வரை கண்ணுக்கு புலப்படாது
சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலை வளர்ப்பதற்கு
முகமறியா மழலையின் முத்தம் சுகமானது... முகவரி அறியாதவரின் உதவி சுகமானது.... எத்தனை கேலி செய்தாலும் சண்டையே போட்டாலும் வெளியே செல்லும் போது "பார்த்து போ" என்று பாசத்துடன் சொல்லும் அனைவரின் அன்பு சுகமானது... மொத்தத்தில் வாழ்க்கை சுகமானது...
என்னருகில் நீ இருந்தால் தினமும் பௌர்ணமியே.
எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருங்கள்!, ஆனால் மனிதர்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்!
ஒரு பெண்ணின் உண்மையான அன்பிற்கு முன்னால் எந்த ஆணுமே குழந்தையாகி விடுகிறான்
பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள் பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்
ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படை நற்குணம், தனக்குத்தானே உண்மையாக இருப்பது
தூக்கி எறிந்த பிறகுதான் சிலருக்கு தெரிகிறது... கையில் இருந்தது " கல் " இல்லை " “வைரம் " என்று
Thanks for spending time reading the Beautiful Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.