Bharathiyar Quotes in Tamil

Bharathiyar Quotes in Tamil

The Reviewed Link for the Bharathiyar Quotes in Tamil is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer. 

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா.

தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டும் அல்ல.. தமிழ் ஒருவனுக்கு ரௌத்திரத்தையும் பழக்கும்.

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

- மகாகவி பாரதி

வல்லமை தாராயோ! என்ற உன் ஏக்கம் வெற்றி பெற ஏங்கும் உன் விசிறி உன் தொலைநோக்கு திறனை கண்டு வியந்தோம் பெண் உரிமைக்கு முன்னின்றாய் சாதிகள் இல்லை என்றாய் இவ்வாறாய் நின்ற நீ, உன் திறனை அன்று மதியாதோர் பவர் இருப்பினும் இன்று உன் கவிதைகளை சுவைக்க ஏங்கி நிற்க வைத்துள்ளாய்

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின் வாக்கினிலே ஒளி யுண்டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்; தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்.

-மகாகவி பாரதியார்

பட்டினி கிடந்தது பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்திடினும் கட்டி இழுத்து கால்கை முறித்து அங்கம் பிளந்து இழந்து துடிதிடினும் பொங்கு தமிழை பேச மறப்பேனோ.....

அச்சம் தவிர் கற்ற தொழுகு நேர்படப் பேசு நையப் புடை கோல்கைக் கொண்டு வாழ்

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும்

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென.. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்

கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய்ப் பிற செடியாய்ப் பிறந்தால் தொட்டால் சிணுங்கிச் செடியாகப் பிற மனிதனானால் காதல் செய்...!

- மகாகவி பாரதி

காற்று மெலிய தீயை அவித்து விடுவான் வலிய தீயை வளர்ப்பான் அவன் தோழமை நன்று அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்

- பாரதியாரின் வசன கவிதை

தமிழா உனது வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உண்மை தவங்கரக்கெல்லாம் உயிர். உண்மை பரமாத்மாவின் கண்ணாடி ஆதலால் தமிழா,எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.

பல காலம் கடந்தாலும் சிப்பிக்குள் மூடிய முத்துக்களாய் பளபளக்கும் உன் கவிதைகள்

தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பலசெயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரையானப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் மறக்கக் கூடாது.

- பாரதியார்

பல வேடிககை மனிதரைப் போலே - நான் வீழ்வேன் னென்று நினைத் தாயோ?

- மகாகவி பாரதியார்

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத் தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!

- மகாகவி பாரதியார்

நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சி யஞ்சி சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனை பேய்கலென்பார் - இந்த மரத்திலென்பார்; அந்தக் குளத்திலென்பார். துஞ்சுது முகட்டிலென்பார் - மிகத் துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்... தெளிந்த நல்லறிவு வேண்டும்..

ஒளியற்ற பொருள் சகத்திலே இல்லை இருளென்பது குறைந்த ஒளி

நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக நமது வாக்கு மின்னல் போல் அடித்திடுக நமது பாட்டு,மின்னலுடைத்தாகுக. பாரதியின் வசன கவிகை

மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும், காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும், வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும். ஓம் ஓம் ஓம் ஓம்

Thanks for spending time reading the Bharathiyar Quotes in Tamil. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes