Buddha Quotes in Tamil

Buddha Quotes in Tamil

The Reviewed Link for the Buddha Quotes in Tamil is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.

பகையை பகையால் தணிக்க முடியாது. அன்பின் மூலமாகத் தான் பகையுணர்வு நீங்கும்.

எதை உன்னிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாதோ அதுதான் உன்னுடையது. உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளலாம் எனும் எதுவும் உன்னுடையது ஆகாது.உன்னுடையது எதுவோ அதனோடு இருந்து விடும் யாரும் அதை உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ள முடியாது....

குறை இல்லாதவன் மனிதன் இல்லை அதை குறைக்கத் தெரியாதவன் மனிதனே இல்லை ..!

தவறு செய்பவர்களை மன்னித்துவிடு ஆனால், அவர்களை திரும்ப நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதே..!

உன்னைக் கோபப்படுத்துவது...ஒருவனுக்கு இன்பத்தைத் தருவதாக இருந்தால்....!பதிலுக்கு நீ கோபப்படாமல் இருப்பது.. உனது இன்பமாக இருக்கட்டும்!!

அதீத சிந்தனையே மகிழ்ச்சியற்றதற்கு மிகப்பெரிய காரணம்.

பெருமையின் சிகரத்தை எட்டியதெல்லாம் வீழ்ச்சியடையும் தோன்றுவதெல்லாம் நிச்சயம் அழியும்

நீ மனிதனாக வாழ்ந்தால் கோயிலுக்கு போவாய் நீ புனிதனாக வாழ்ந்தால் நீயே கோயிலாவாய்

தர்மம் : தேடிப்போய் செய்! உதவி : நாடி வருபவருக்கு செய்!

ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன். கௌதம புத்தர்

அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேல்...!

மன அமைதி பெற விரும்பினால் பிறர் குறைகளை காணாதே, அதற்குப் பதிலாக உன் குறைகளை காண்...!!!

ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும், வாழ்வை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும், அவரவர் பாதை, அவரவர் மனம், அவரவர் வாழ்க்கை .!

உடல் நோயற்று இருப்பது...முதல் இன்பம். மனம் கவலையற்று இருப்பது. இரண்டாவது இன்பம், பிற உயிர்களுக்கு உதவியாக இருப்பது.. மூன்றாவது இன்பம்.

ஏதோ ஒன்றை இழப்பதன் மூலம், ஏதோ ஒன்றை பெறப் போகிறோம் என்று சமாதானம் அடையும் மனதில், இழப்பு இலகுவாகி நம்பிக்கை துளிர்விட ஆரம்பிக்கிறது.

உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும் இறைவன் உங்களிடம் ஒப்படைப்பதில்லை .. நம்பிக்கையோடு செயல்படுங்கள்.

அமைதியாய் இருப்பவன்முட்டாள் என்று எண்ணிவிடாதே... பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி..

தீமையை நன்மையால் வெல்லுங்கள், பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். -புத்தர்

அமைதியை விட உயர்வான சந்தோசம் இந்த பூமியில் வேறு ஒன்றும் இல்லை . - புத்தர்

புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.

மகானைப் போல நீ வாழ வேண்டும் என்றில்லை , மனசாட்சியின் படி வாழ்ந்தாலே போதும்.

காத்திரு... நடக்க இருப்பது சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான காரணத்துடன் நடக்கும்.

அயிரம் வெற்று வார்த்தைகளை விட சிறந்தது அமைதியைக் கொடுக்கும் ஒரு சொல்.

எல்லாமும் அழிவதை பார்த்து கொண்டே, தன் வாழ்வு மட்டும் நிலையானது என்று எண்ணி மனித மனம் துன்பத்துக்கு ஆளாகிறது..- புத்தர்

மனதை அடக்க நினைத்தால் அலையும்,அதை அறிய நினைத்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான், இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்..

வாழ்க்கையில் ஒருவனுடைய செல்வமோ, அதிகாரமோ அவனை மேலும் மேலும் கீழ் நிலைக்குத் தள்ளி விடுகின்றன.. -கௌதம புத்தர்

எதற்காகவும் அவசரப்படாதீர்கள். நேரம் வரும் போது தானாகவே அது நடந்தேறும்

அச்சம் என்பது தலைதூக்கி நிற்கும் வரை நாம் அடிமையாகத் தான் வாழ வேண்டியிருக்கும்...

தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். - புத்தர்

எண்ணங்கள் ஈடேற வேண்டுமென்றால் நல்ல எண்ணங்களை மட்டுமே விதைக்க கற்றுக்கொள் -புத்தர்

அறியாமையுடன் நூறு நாள் வாழ்வதை விட அறிவுடன் ஒரு நாள் வாழ்வதே மேல்....

பிறருக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையெனில் கனிவான வார்த்தைகளையாவது பேசுங்கள்

நடந்து முடிந்த எதையும் ஒருபோதும் கவனிக்காதே. எதை செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டும்கவனமாக இரு...

அவர் சொன்னார். இவர் சொன்னார். என்பதெல்லாம் போதும். உம் மனம் சொல்வதென்ன. சற்று நின்றே கேளும்.

உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னுடன் நிலைப்பதில்லை உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதும் இல்லை

ஆசைக்கும் அன்புக்கும் அடிமையாகாதீர்கள் ஏனெனில் இரண்டுமே உங்களை அடிமையாக்கிவிடும்..!

நிம்மதியாக இருக்க ஆசைப்பட்டு எதையும் தேடி அலையாதே..! கிடைத்ததை அனுபவிக்கக் கற்றுக்கொள்... நிம்மதி உன்னைத்தேடி வரும்...!!

புத்தரிடம் கேட்கிறார்கள். "ஆசைப்படுவதற்கும் நேசிப்பதற்கும் என்ன வித்தியாசம்?" புத்தரின் பதில் மிகவும் எளிமையானது. "ஒரு பூவைப் பிடித்திருந்தால், நீங்கள் அதைப் பறித்துவிடுவீர்கள். ஆனால், அதை நேசித்தால், தினமும் நீரூற்றுவீர்கள்!"

யாரையும் எதிரியாக நினைக்காதே... இல்லாவிட்டால், உனக்கு நீயே துன்பத்தை தேடிக் கொள்வாய்..! -புத்தர்

உன்னை தவறாகப் புரிந்து கொண்டவரைப் பற்றி தவறாக எண்ணாதே! மனிதர்க்குள் மனோபாவம் வேறு வேறானது என்பதை அறிந்து அமைதியாக இரு..!!

பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு.

பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் உங்கள் சுமையை வீசி எறியுங்கள் -புத்தர்

நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது..நாளை நடப்பதைத் தடுக்க முடியாது... இன்றைய பொழுதில் இக்கணத்தில் வாழுங்கள்! அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு! -புத்தர்

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு, உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை.

நீங்கள் மன அழுத்தத்திலிருந்தால் இறந்தகாலத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் கவலையிலிருந்தால், எதிர்காலத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் மன அமைதியிலிருந்தால், நிகழ்காலத்தில் வாழ்கிறீர்கள்.

நடக்கும் முன்னே .. நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள். நடந்த பின்னே .. நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.

விரோத மனப்பான்மை இல்லாமல் எதைச் செய்தாலும் அது தடையின்றி முழுமையாக நிறைவேறும். -புத்தர்

இருளில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே, இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது

உலகிற்கு அரசனாக இருக்க வேண்டுமானால் முதலில் உன் மனதுக்கு சேவகனாக இருக்கவேண்டும்.

மனதில் நினைப்பதை சொல்ல வேண்டும். இல்லையெனில் மௌனமாக இருப்பதே சிறந்தது..!!

அழியும் பொருள் மீது, அழியா பற்றுற்று அலையும் மனமே... உன் உடலும் ஓர் நாள் அழியுமென்றறியாயோ, ஆன்ம சுகம் தேடாயோ.

நீ செல்வதற்கு பாதையை தேடாதே பாதையை நீயே உருவாக்கு..

தியானத்தின் நோக்கம், உன் எண்ணங்களை கட்டுப்படுத்துவது அல்ல. எண்ணங்கள் உன்னை கட்டுப்படுத்தாமல் இருப்பது.

எவரொருவரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கு வாழ்வது உங்களது வாழ்க்கையை வாழத்தானே தவிர ஒவ்வொருவரும் உங்களை புரிந்து கொள்வதற்காக அல்ல

மகிழ்ச்சிக்கான 5 வழிகள். 1. கவலை கொள்ளாதீர்கள். 2. யாரையும் வெறுக்காதீர்கள். 3. முடிந்தவற்றை மற்றவருக்கு கொடுங்கள். 4. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். 5. எளிமையாக வாழுங்கள்.

மனமே எல்லாம் நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய் - கௌதம புத்தர்

ஓவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு காரணமின்றி விளைவில்லை இவை இரண்டும் இணைந்து செல்கின்றன நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது - புத்தர்

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் இல்லை விட்டுவிடுங்கள்..!

பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வாழ ஆசையில்லை ... பிறர் சபிக்காத அளவிற்கு வாழ்ந்தால் போதும்...

Thanks for spending time reading the Buddha Quotes in Tamil. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.  

Related Quotes