The Reviewed Link for the Emotional Quotes in Tamil is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும் அதற்கு பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை... அன்பு கூட தான்
காயப்பட்ட மனதுக்கு தேவை மருந்து.... மீண்டும் காயங்கள் அல்ல..!!
உன் காதலியை உன் குழந்தையாய் பாரு அப்போது தான் அவள் தரும் வலிகளை தாங்க வசதியாய் இருக்கும்
யோசிக்கும் முன்பே உன்னை நேசித்துவிட்டேன் இன்று யோசித்து கொண்டிருக்கின்றேன் ஏன் நேசித்தேன் என்றல்ல, இன்னும் இன்னும் உன்னை எப்படி நேசிப்பதென்று...
பிடித்த ஒருவரின் அழைப்பிற்காக காத்திருக்கும் வலி உண்மையாய் நேசித்த சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்.
பிரிவெனும் சிறையில் அவனும் அவளும் மொழியிருந்தும் ஊமையாகி தீக் குளிக்க முதல் சந்திப்பில் பச்சைக் கொடி காட்டிய மரமும் பட்டையானது இன்று எம்மை போல்
உன் கவலைகளில் மறந்து விட்டாய் என் காதலை... வழிகளின்றி தவிக்கிறோம் நானும் என் காதலும்
உன்னை நினைக்கையில் சிந்துகின்ற கண்ணீர் கனமானது ஏனெனில் அதில் கரைந்திருப்பது நான்
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்.... ஆனால் மறந்து போய் விடாதீர்கள்... அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்....
இன்று நீ என்னை பிரிந்தாலும் மறந்தாலும். என்றாவது ஒரு நாள் நீ என்னை நினைக்கும் போது.. நான் உன் கண்களில் இருப்பேன்... கனவாக அல்ல கண்ணீராக...
அளவு கடந்த கஷ்டத்தை அனுபவிக்கிறாய் என்று வருத்தம் அடையாதே… உனக்காக எல்லையில்லாத சந்தோஷம் காத்திருக்கும் கவலைப்படாதே..
ஒரு நாள் நீ நானாக வேண்டும்...! நான் நீயாக வேண்டும்...! அன்று உனக்கு புரியும் நான் படும் வேதனை..
தேடி தேடி போய் பேசுவதினால் ஏனோ சிலருக்கு நம் அருமை புரிவதில்லை..
சத்தமிட்டு சிரிக்க வைப்பதும் சத்தமேயில்லாமல் அழ வைப்பதும் ஒரு சிலரே..
பிரிவுகளை சந்திக்கும் போது தான் சில உறவுகளை பற்றி சிந்திக்க முடிகிறது.
எனக்கே தெரியாம உன் மேல அதிக பாசம் வச்சுட்ட அதான் உன்னோட சிறிய மாற்றம் கூட என்ன ரொம்ப காயப்படுத்துது....
புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது... தவறாய்... புரிந்துகொள்ளப்படுவது...!
உங்களின் தேவைக்காகவோ , பொழுது போக்கிற்காகவோ பிறரின் உண்மை அன்பிலும் அவர்களின் உணர்விலும் விளையாடாதீர்கள்.
உதடுகள் சிரிப்பது ஊருக்கு தெரியும் ஆனால் உள்ளம் அழுவது யாருக்கு தெரியும் நண்பனை தவிர
என்னை புரிந்துக் கொள்ள முடியாதவர்களுக்கும், புரிந்துக் கொள்ள மறுப்பவர்களுக்கும் மத்தியில் நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்
உடலுக்கு உயிர் கூட சுமைதான் நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து போகும் போது.
உன்னைவிட்டு விலகி செல்பவற்றை சந்தோசமாக வழியனுப்பி வை.. வாழ்க்கை , அதைவிட ஒரு சிறந்த பரிசு தயாராக இருக்கிறது என்று அர்த்தம்..!
சொல்லத் தெரியாத வயதில் சத்தமாகவும், சொல்லத் தெரிந்த வயதில் மௌனமாக மனதிற்குள்ளும் அழுது கொள்கிறோம்..
அன்பைக்கூட"அலட்சியமாக" பார்க்கும் உன்னிடம் என் அன்பை காட்டியதும் என் தவறுதான். அன்பை எதிர்பார்த்ததும் என் தவறு தான்.
நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு..! சிலரை உண்மையாக நேசிப்பதுதான்..!
என் உளறல்களை கவிதையாக்கிய அவள் தான்... இன்று என் கவிதையில் கண்ணீராய் வாழ்கிறாள் !!!
தனிமை கொஞ்சம் வித்தியாசமானது தான் அதை நாமே எடுத்துக்கொண்டால் "இனிக்கும்" மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் "கசக்கும்"
உண்மையான அன்பை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது அந்த அன்புக்கு உரிமையானவர்கள் மட்டுமே அதை உணர முடியும்....
சிலர் நம்மை விட்டு போகும் அழுகிறார்கள் சிலர் நாம் அழும் போது நம்மை விட்டு போகிறார்கள்.!
உரிமையோடு சிலரை உறவென்று நினைத்ததை தவறென்று புரிந்தேன்.. மீண்டும் தனிமையே போதும் என்று விலகி விட்டேன்.
உன்னோடு வாழ்வதற்கும் உன் நினைவோடு வாழ்வதற்கும் சிறு வித்தியாசம் தான் உன்னோடு வாழ்ந்தால் அது வரம் உன் நினைவோடு வாழ்ந்தால் அது தவம்.
காதல் சிரிக்க வைப்பது போல் சிரிக்க வைக்கும்.. ஆனால்.. நிச்சயம் ஒரு நாள் செத்துப் போகும் அளவுக்கு அழ வைக்கும்...!!
அன்பான ஒருவரிடம் தோற்றுப்பாருங்கள் வெற்றியை விட தோல்வி எத்தனை சுகம் என்று தெரியும்...!!!
சிலருக்கு புரிய வைக்கும் முயற்சியின் பெரும் தோல்விகளே நம்முடைய அனுபவங்களாகின்றன..
அளவுக்கு மீறி கூர்மையாக இருந்தால் உங்களை நீங்களே நறுக்கிக் கொள்வீர்கள்.
உன்னைப்பற்றி எதுவும் தெரியாமல் நான் கடக்கின்ற ஒவ்வொரு நொடியும் நரகமாய்
நேசிக்கும் இதயம் உன்னை திட்டினால் கவலைப்படாதே!! ஏனென்றால்...உன்னை காயப்படுத்தும் முன்பே அது கவலைப்பட்டிருக்கும்!!!
சிறு தவறுக்காக ஒருவரை விட்டு விலகாதே அதுவே உன் பெரும் தவறாகிவிடும்.
அளவோடு பழகணும் எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரியவரும்
Thanks for spending time reading the Emotional Quotes in Tamil. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.