The Reviewed Link for the Lord Shiva Tamil Quotes is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
சிந்தனையற்ற தனிமை வேண்டும் மனம் மரத்திட வேண்டும். தன்னிலை மறந்திருக்க வேண்டும் மயக்கம் அறுத்திட வேண்டும். உள்ளொளி பெருக வேண்டும் உண்மை நிலை அறிய வேண்டும். உன்னுடன் கலக்க வேண்டும் சிவமாகவே மாறிட வேண்டும்...
வாழ்க்கையில் சிவத்தை தவிர உனக்கு நிரந்தரம் என்று ஒன்றும் இல்லை மற்றவை அனைத்தும் நீ யாக உருவாகி கொண்ட மாயய் இன்பம் தரும் என்று ஏமாறாதே.. சிவாய நம ஓம்
பார்ப்பவன் என்ன நினைப்பான் என்று பயத்துடன் வாழாதீர்கள்.. படைத்தவன் என்ன நினைப்பான் என்று பயந்து வாழுங்கள்!
காரணம் இல்லாமல் கவலை கொள்ளாதே.... காரணம் இருந்தாலும்... கலக்கம் கொள்ளாதே எதுவும் கடந்து போகும்.... இதுவும் கடந்து போகும்....
உனக்கு நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும்
ஆதாரமே நீயாகும் போது, அங்கே யாரை தேடுகின்றாய். ஜீவனே சிவனாம், அவனை சிக்கென பிடித்தால் உன் சிக்கல்கள் பறந்தோடும்.
சொந்தம் என்று சொல்வதெல்லாம் சொந்தமில்லை மானிடா! நீ வந்த உலகில் அவன் தந்த உடம்பில் சொந்தம் என்பது ஏதடா? தங்கிச்செல்லும் வழிப்போக்கனே!
என்னருகில் நீ இருந்தால் இன்ப துன்பம் சரிசமமே, உன்னருகில் நான் இருந்தால் இப்பிறவி பயன் பெறுமே சிவமே சிவமே
என் வாழ்க்கை பயணத்தில் இந்த உலகில் வாழும் மனிதர்களோடு போராடி போராடி நான் தோற்றுப்போவதை விட என்னை படைத்த இறைவனோடு போராடி என்றாவது ஒரு நாள் வென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பனே. சிவாய நம
என் கண்ணிரண்டை காப்பாத்தும் கண்ணிமையும், நீதான் என் தோள்களிலே முழு பலமாய் உள்ளவனும் நீதான்
ஒளிர் விடும் எம் தேசனே குளிர் மலை தன் வாசனே எழில்மிகு எம் நேசனே அழித்தொழிக்கும் ஈசனே
பிரார்த்தனை செய் கடவுளிடம் செல்லலாம், தர்மம் செய் கடவுள் உன்னிடம் வருவார்
நீ துவண்டு போகும் சமயத்தில் யாரும் துணை இல்லை என்று கலங்காதே... உனக்காக ஏதோ ஒரு உருவில் உன்னுடன் துணையாக நான் வருவேன்.... ஈசன்.
இந்த பிரபஞ்சத்தில் அவனின்றி நிரந்தரமானது எதுவுமே இல்லை
உடலில் உயிர் இருக்கும் போதே ஈசனை ஆற தழுவிக்கொள் உன் ஆன்மாவுக்கு அவனை ஆற தழுவும் பாக்கியம் கிடைக்காது ஆன்மா உடல் இல்லாதது உணர்வு இல்லாதது அவனை உணர தான் இவ்வுடல் படைக்க
பட்டிருக்கிறது. அன்புடன் ஈசன் அடி தேடி
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள்தருவாய் போக்குவாய் என்னை புகுவிப்பாய் நின் தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே..
அன்பே சிவம், நீ நீயாக வாழ கற்றுக்கொள் சிலர் உன்னை விரும்புவார் சிலர் உன்னை வெறுப்பார், கவலைப்படதே இது உன் வாழ்க்கை..
அமைதி கொண்டால் மனத்துள் அடக்கம், ஆணவம் கொண்டால் மண்ணில் அடக்கம், இதுவே இறைவன் விளக்கம்.
அணுவிற்குள் அணுவும் நீ அண்டங்கள் அனைத்தும் நீ கரும்புக்குள் சுவையும் நீ கருணைக்கு எல்லையும் நீ விண்ணும் நீ மண்ணும் நீ.. ஓம் நமச்சிவாய
வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்காதே.. அது உன் நிம்மதியை தொலைக்க வைக்கும்.. காலம் அதன் கருமத்தை கச்சிதமாக செய்யும் வரை பார்த்துக் கொண்டிரு..!
எவன் போனால் என்ன சிவன் இருக்கான் எனக்கு.
உன்னை சோதனை செய்வது எனக்கு வருத்தம்தான் என்ன செய்வது நீ வாழ வந்துவிட்டாய் நான் சோதிக்க பழகிவிட்டேன்...
காலம் பேசாது ஆனால் எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்...
துன்பம் வரும்போது மட்டும், இறைவனை நாடிச்செல்லாதீர்கள். எப்போதும் இறைவனிடம் உண்மையாய் இருங்கள்.
உயர்வைத் தேடி அலைகிறவனுக்கு அது கிடைப்பதில்லை. உயர்வு என்பது தன்னை அடையும் தகுதியுடையவனைத் தேடிச் சென்று அவனை உயர்த்துகிறது.
உன்னை நினையாமல் ஒரு நொடியும் கழிவதில்லை! உன்னை வணங்காமல் ஒரு பொழுதும் விடிவதில்லை....
காயங்களின்றி காலம் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை !!!
நின் பாதம் பற்றியதால் என் பாவம் கரைந்ததையா உன் நாமம் சொல்லுவதால் என் வாழ்வு இனிக்குதையா அண்ணாமலையானே...
கொடுக்க மனம் இருந்தால் மனமார கொடுத்து விடு, கொடுத்ததை அச்சமயமே மறந்து விடு இல்லை அச்செயலை செய்யாதே.....
எதுவாயினும் கடக்க பழகு! எல்லாம் சிறிது காலம் தான்!
எப்பொழுதும் உன் நினைவாய், இருக்க வேண்டும், தப்பாமல் உன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், முப்பொழுதும் உன்னடிகள் துதிக்க வேண்டும், ஒரு கணப்பொழுதும் உனைமறவா திருக்க வேண்டும் சிவனே.
சிலையாக கண்டோர்க்கு நீ சிலைதான் கலையாக கண்டோர்க்கு நீ கலைதான் இறையென்றோர்க்கு இறை ஆவான் சிறைகொண்டு மனதில் சிவன் ஆள்வான்
உடலை வருத்தி எதைச் செய்தாலும் இறைவனை அடைய இயலாது. மாறாக நெஞ்சம் உருகி அன்பு மயமாய் குழைந்தால் மட்டுமே இறை நிலையினை அடைவது சாத்தியம்.
என்னிடம் நம்பிக்கை கொண்டால் எப்போதுமே வருந்த தேவையில்லை உன் அப்பன் ஈசனின் வாக்கு தர்மம் வெல்லும் கலங்காதே..
கடவுளே இல்லை என்று வாதாடியவன் எவனும் எனக்கு மரணம் இல்லை என்று வாதாட முடியவில்லை ..!
Thanks for spending time reading the Lord Shiva Tamil Quotes. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.