The Reviewed Link for the Tamil Quotes About Wife is below. If you like our quotes, Kindly share them with your friends and family. Follow us on social media to get high-quality image quotes. Our social media links are given in the footer.
தேவதை போல ஒரு மனைவி கிடைக்க வேண்டும் என்பதை தாண்டி கிடைக்கும் மனைவியை தேவதையை போல பார்த்து கொள்ள விரும்புகிறவன் தான் உண்மையான ஆண்!!!
நாம் உள்ளத்தில் நினைக்கின்ற ஒன்றை நாம் கூறாமலே புரிந்து கொள்ளும் உறவுகளை நம் வாழ்வில் பெறுவது வரமே
கணவன் மனைவிக்கு குழந்தை பிறப்பது இயல்பு. ஆனால், கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும், குழந்தையாவது வரம்
உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் தன் மனைவியிடம் சிறந்தவரோ அவரே..
ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது.....
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவி தான்... மனைவிக்கு கணவன் தான்.... அதற்கு இணை வேறு எதுவும் இல்லை ... விழுதுகள் மரத்தை தாங்கலாம் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும்.... கணவன், மனைவி எனும் உறவும் இதைப்போல தான்...
மனைவி வீட்டில் இல்லை நிம்மதி என்று அதிகம் நகைச்சுவை ஆயிரம் பேசினாலும்..... வீட்டில் நுழைந்தவுடன் மனைவியை காணாமல் ஏங்கி தேடும் கண்களே ஏராளம்.....
உணர்ச்சிகளால் ஆள நினைப்பதைவிட்டு உணர்வுகளால் ஆள்ந்துபார் உன் துணைவியைவிட ஓர் உயர்ந்த உயிர் தோழியை வாழ்வில் நீ காணவே மாட்டாய்..!!
ஒவ்வொரு திருமணமான பெண்ணும் தன் வாழ்நாளில் இந்த தருணத்தை கடக்காமல் இருக்க முடியாது.... தன் குடும்பத்தினர்காக கணவனையும், தன் கணவனுக்காக தன் குடும்பத்தினரையும் விட்டுகொடுக்க முடியாமல் தவிக்கும் சூழ்நிலையை..
பெண் மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும் நடந்ததெல்லாம் சொல்லி தீர்க்க ஒரு உறவும் தான்..
எவ்வளவு பெரிய துன்பங்களையும் உன் புன்னகையால் விழுங்கிவிடுகிறாய்
நல்ல மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் அல்ல... அவளின் பெற்றோர்கள் வளர்த்த விதம்....
தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே..
ஒரு பெண் மனைவியாக மாறும் போது கணவனுக்காக பல உறவாக மாறுகிறாள்
பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது. நல்ல மனைவியே
நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ மட்டுமல்ல உனக்காக மட்டும் வாழ..
அன்பு நிறைந்த உள்ளம் தான் அதிகம் சண்டை போடும். பிரிவதற்கு அல்ல.. பிரிய கூடாது என்பதற்காக...
காலங்கள் கடந்து போகும் போது ''அழகான மனைவியின் அழகு குறையலாம்; ஆனால் "அன்பான” மனைவியின் அன்பு அதிகரிக்கவே செய்யும்.....
என் வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வேன் ஆறுதல் கூறுவதற்கு நீ என் அருகில் இருப்பாயானால்..
என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய் அதற்கு என் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் திகட்டாத ஒரே கவிதை உன் பெயர் தான்..
தனியாக ஓர் உலகம் வேண்டும்.. அதில் நீ மட்டும் உறவாக வேண்டும்.. இத்தனையும் கனவின்றி நனவாக வேண்டும் இக்கணமே...
கோபப்பட்டாலும்.... திட்டினாலும்... ஏன் அடித்தாலும் கூட, நீ துயரப்படும் போது கண்ணீர் வடிப்பதும்..... கடைசி வரை ஆறுதலாய் கூட வருவது மனைவி மட்டும் தான். மனைவியை மட்டும் நேசியுங்கள்
பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரண்டும் மிக முக்கியம் மனித வாழ்வில்.... ஆனால், இவை இரண்டிற்கும் எல்லைகள் உண்டு.... உன் அன்புக்கு மட்டும், என்றும் எல்லையும் இல்லை எதிரியும் இல்லை...
மனைவியை எங்கும் விட்டுக் கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள், இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே.....
திருமணம் ஆகி தனது தாய் தந்தையை பிரியும் ஒவ்வொரு பெண்ணின் விருப்பமும்... தன் கணவன் தனக்கு இன்னொரு தாய் தந்தையாக இருக்க வேண்டும் என்பதே.....
ஒரு பெண் உன்னை அழ வைக்கிறாள் என்றால் அவளை இழந்துவிடாதே! அவளைத் தவிர உன்னை சந்தோஷமாகப் பார்த்துக்கொள்ள யாராலும் முடியாது! அவளே உன் மனைவி!
இளமையில் மனைவியின் காவலன் கணவன்! முதுமையில் கணவனின் ஊன்றுகோல் மனைவி! தாங்கிப் பிடிக்க துணை இருந்தால் தள்ளாடும் முதுமையும் இளமையே..
தன் மனைவிய அடிக்கடி குறை கூறிக்கொண்டிருக்கும் கணவனுக்கு தெரியாது.... தன் முதுமையில் அவள்தான் தாயாவாள் என்று!
என்ன தவிர வேற எவ கிட்டயாவது பேசின உன்ன கொன்னுடுவேன்னு சொல்ற பெண். எந்த ஆணுக்கு கிடைக்கிறாளோ அவள் அந்த ஆணுக்கு கிடைத்த வரம்..
Thanks for spending time reading the Tamil Quotes About Wife. If you do like Tamil quotes, share them with your friends. For any correction or suggestion, kindly contact us by clicking here. Check out the similar quotes below.